Posts

Showing posts from April, 2012

மீண்டும் Manila வில்...

Image
வரவே கூடாது என்று எதிர்பார்த்த அந்தநாளும் வந்து செல்வந்தன் வீட்டுப் பணப்பெட்டியாய்க் கனத்த மனத்துடன், தொப்புள் கொடியை மறுபடியும் கத்தரித்து Manila வந்து இறங்கிய போது நேரம் நள்ளிரவு கடந்திருந்தது. காகிதக்கடமைகள் முடித்து காவல்கள் தாண்டி விமான நிலையம் விட்டு வெளியே வந்த போது உறவுகள் பசியின்றித் தூங்க வேண்டும் என்பதற்காக தூங்காமல் கடமை புரியும் வாடகை வண்டிச் சாரதிகளின் வரவேற்பு, பயணம் இன்னும் முடியவில்லை என்பதை பக்குவமாகச் சொல்லியது. சினேகிதி ஒழுங்கு செய்து கொடுத்த வாகனத்தில் இன்னும் மூன்று சகமாணவர்களுடன் சாய்ந்து அமர்ந்த போது வண்டிச்சாரதி உள்ளூர்ப்பாசையில் சொன்னது என்னவென்று அவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நிறுத்திய போதுதான் புரிந்தது. எண்ணெய் நிரப்பிய வாகனமும் சிறுநீர் களித்த சகமாணவனும் "பாகங்கள்" மறைத்து புத்துயிர் பெற்ற போது, இன்னும் ஒரு மணி நேரத்தில் உறங்குமிடம் வந்துவிடும் என்ற எண்ணம் கொடுத்த உவகையை, உயிருடன் எரித்தது உதடு பிரித்த வண்டிச்சக்கரம். வாகனம் மாற்றி மனை வந்த போது மனிதன் வகுத்த காலக் கணக்கில் இன்னும் சில மணித்துளிகள் செலவாகி இருந்தது. கண்டங்கள் கடந்