Posts

Showing posts from 2011

என் நாட்குறிப்பிலிருந்து...

கண்ண மூடி யோசிக்கும் போது என் மனக்கண்ணில மங்கலாவும் பிரகாசமாவும் தெரியிற காட்சிகளுக்கு எழுத்துக்கள் எண்ட உருவமும், உணர்வு எண்ட உயிரும் குடுக்கிற ஒரு எத்தனிப்பு! இந்த இருபத்தெட்டு வருஷ, ஒரு மாச, இருபது நாள் (2010/10/05) வாழ்க்கையோட ஒவ்வொரு செக்கனிலயும் கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச இன்னும் செல்லரிக்கப்படாத நினைவுகள இரை மீட்டுப்பார்க்கிற ஒரு இடம் தான் இந்த "என் நாட்குறிப்பிலிருந்து...". இது வரைக்கும் வாழ்க்கையில கடந்து வந்த பருவங்களை அசை போட்டுப் பார்க்கிறதில அப்பிடி ஒரு சந்தோசம், நிம்மதி. இதுவரைக்கும் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற, இனி வாழப்போகிற ஒவ்வொரு நொடியுமே ஒரு பருவம் தான். அப்பிடியான ஒரு வாழ்க்கைய இளமை, முதுமை எண்ட ரெண்டு வார்த்தைகளுக்குள்ள அடக்குறதுக்கு ஏனோ என் மனசு இடம் குடுக்கேல. கடந்து வந்த ஒவ்வொரு நொடியும் எதோ ஒரு பாடத்த கத்துகுடுத்து இருக்கு எண்டத எவராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு மரமும் போதி மரமா எண்டு எனக்கு தெரியாது ஆனா ஒவ்வொரு நொடியும் ஞான நொடிகள் எண்டதில எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பிடியான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகொண்டு இருக்கிற என்னோட வாழ்க்கையில நடந்